பல்லவி
1ப4ஜ ராமம் ஸததம் மானஸ
சரணம்
சரணம் 1
அமித ஸு1பா4கரம் பாப திமிர விபா4-கரம் (ப4)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ப4ஜ/ ராமம்/ ஸததம்/ மானஸ/
வழிபடுவாய்/ இராமனை/ எவ்வமயமும்/ மனமே/
சரணம்
சரணம் 1
அமித/ ஸு1ப4/-ஆகரம்/ பாப/ திமிர/ விபா4-கரம்/ (ப4)
அளவற்ற/ மங்களத்தின்/ ஊற்றினை/ பாவ/ இருள் (நீக்கும்)/ பகலவனை/ வழிபடுவாய்...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ப4ஜ ராமம் ஸததம் மானஸ - சில புத்தகங்களில் இச்சொற்கள் பல்லவியில் இருமுறை கொடுக்கப்பட்டுள்ளது
சில புத்தகங்களில் 'மானஸ' என்ற சொல் ஒவ்வொரு சரணத்தின் கடைசியிலும் கொடுக்கப்பட்டுள்ளது
Top
மேற்கோள்கள்
விளக்கம்
2 - ஸ1த முக2 - நூறு தலையன் (முகத்தோன்) - தியாகராஜர் தனது 'தே3ஹி தவ பாத3 ப4க்திம்' என்ற கீர்த்தனையில் சீதையை 'ஸ1த முக2 மத3 த3மனே' - (நூறு தலையன் (முகத்தோன்) செருக்கினை அழித்தவளே) என்று அழைக்கின்றார். இச்சொல் - நூறு தலையன் (முகத்தோன்) - ராவணனைக் குறிக்கும். அதன்படி, இங்கும் இச்சொல்லுக்கு, 'ராவணன்' என்று பொருள் கொள்ளப்பட்டது.
3 - யம புராராதி லாப4ம் - முப்புரங்களை சிவன் எரித்தபோது, அம்மூன்று அரக்கர்களையும், சிவன், தனது 'பாசுபதம்' என்ற வில்லினில், விஷ்ணுவை அம்பின் நுனியாக்கி, எய்து கொன்றார். அதனால், முப்புர அரக்கர்களுக்கு, விஷ்ணு, 'நமன்' என்று தியாகராஜர் கூறுவதாகவும் கொள்ளலாம். ஆனால் 'லாப4ம்' என்ற சொல் கொடுக்கப்பட்டுள்ளதால், அப்படிப்பட்ட பொருள் கொள்ள இயலாது. இச்சம்பவம் குறித்து மகாபாரதம், கர்ண பர்வம், பகுதி 34 நோக்கவும்.
இராவணனால் போற்றப்பெற்றோன் - சிவன்
பாரிஜாதம் - வேண்டியவற்றினை யருளும் வானோர் தரு
கபாலி - சிவன்
நமன், முப்புரங்களின் பகைவன் - சிவன்
Top